கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் தனது ஆதரவாளரையே தாக்கி கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலரின் செயல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரி 176 வார்டு திமுக கவுன்சிலர் வே.ஆனந்தம். இவருக்கும் இவரது ஆதரவாளரான சதீஷ் என்பவருக்கும் இடையே அரசு வேலை வாங்கி தருவது தொடர்பாக பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்பிரசனை தொடர்பாக கவுன்சிலர் அலுவலகத்தில் வைத்து சதீஷ் என்பவரை கவுன்சிலர் ஆனந்தம், அவரது மைத்துனர் பிரபு, மற்றும் ஆர்.கே.குட்டி ஆகியோர் சேர்ந்து இரும்பு ராடால் கடுமையாக தாக்கி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்க சங்கிலியை பறித்து கொண்டதாக சதீஷ் ஆடியோவை வெளியிட்டுள்ளார்.
மேலும் நான் இறந்தால் அதற்கு திமுக கவுன்சிலர் ஆனந்தம் தான் காரணம் என்றும் ஆடியோவில் குறிப்பிட்டுள்ளார். 12 வருடமாக பழகி தன்னை ஏமாற்றிவிட்டார் என்றும் அந்த ஆடியோவில் அவர் குமுறியுள்ளார்.
தற்போது சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக இராயபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடுக்கல் வாங்கல் பிரச்சனையால் தனது ஆதரவாளரையே நையைப் புடைத்த திமுக கவுன்சலரின் செயல் வாக்களித்த மக்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.