திமுகவை சேர்ந்த பஞ்சாயத்து தலைவரை வாய்க்கு வந்தபடி அநாகரிகமாக திட்டிய திமுக மாவட்ட பொறுப்பாளரின் ஆடியோ வைரலாகி வருகிறது.
கோவை அருகே உள்ள அரிசி பாளையம் கிராம பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் கணேசன். திமுகவை சேர்ந்த இவரும், கோவை புறநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேர்ந்த சேனாதிபதியும் போனில் பேசி ஆடியோ ஒன்று வாட்ஸ்அப் குழுக்களில் வைரலாகி வருகிறது.
அதில் பேசும் சேனாதிபதி, தகாதே வார்த்தைகளை பலமுறை உபயோகித்து பேசியுள்ளார். இரண்டு முறை மாவட்ட செயலர் பதவி வகித்த எனக்கு, கட்சி பதவியெல்லாம் என் முடிக்கு சமம் என்று கூறுகிறார். மேலும், அதுமட்டுமன்றி சின்ன வயசுல இருந்தே நான் இப்படித்தான் பேசுவேன் என்று கூறுகிறார்.
இதனைக் கேட்ட கணேசன், “என்ன நா, இப்படி பேசுறீங்க. இந்த வார்த்தை எல்லாம் விடாதீங்க,” என்று கெஞ்சுகிறார்.
இது குறித்து சேனாதிபதியிடம் கேட்டதற்கு, “அது நான் இல்லை. அப்படி பேசுறவன் இல்லை. அதை நான் பேசினது இல்லீங்க,” என்று மறுத்தார். ஆனால், அரிசிபாளையம் கிராம பஞ்சாயத்து தலைவர் கணேசனிடம் கேட்டதற்கு என்னுடன் பேசியது அவர் தான் என்று கூறியுள்ளார்.
இந்த ஆடியோ விவகாரம் கோவை திமுகவில் தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…
நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
This website uses cookies.