சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திடீரென சந்தித்து பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் நீக்கப்பட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றமும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பை அளித்தது. இதனால், ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் என்னவாகுமோ..? என்று கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே, டிடிவி தினகரனுடன் அமமுகவில் இணைந்து செயல்பட வாய்ப்பு கிடைத்தால், அதனை செய்வேன் என்றும், விரைவில் சசிகலாவை சந்திக்க இருப்பதாகவும் நேற்று இரவு கூறியிருந்தார்.
கடந்த மாதம் 2ம் தேதி தனது தாயார் பழனியம்மாள் நாச்சியார் வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததால், சடங்கு சம்பிரதாயங்களை செய்துவிட்டு, ஓபிஎஸ் தேனியில் இருந்து வந்தார். இந்த சூழலில், நேற்றிரவு சென்னைக்கு வந்தார்.
இந்த நிலையில், ஓபிஎஸ் தாயார் மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினர். சென்னை – கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் கூறினார். ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் மனோஜ் பாண்டியன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரும் இருந்தனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.