பாஜகவை நம்பி செல்கிறவர்கள் மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமம் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் என தனி தனியாக பிரிந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர்.
இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆனால், எந்தமுடிவும் எடுக்கப்படவில்லை
இந்நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அதிமுக தற்போது கேப்டன் இல்லாத படகு போன்று சென்று கொண்டிருக்கிறது. கொள்கையும் இல்லை! கோட்பாடும் இல்லை! தலைமையும் இல்லை, என்ற நிலையில் உள்ளது. தமிழ்நாடு திராவிட மண் இங்கு பாஜகவிற்கு இடமில்லை, பாஜகவை நம்பி செல்கிறவர்கள் மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமம்.’ என பதிவிட்டுள்ளார்.
அதிமுக உட்கட்சி பிரச்சனை குறிதது ஆளுங்கட்சி அமைச்சர் விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது. மேலும் திமுக அமைச்சர்கள் அடுக்கடுக்கான புகார்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து வரும் நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜின் விமர்சனம் பாஜகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.