தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பாஜகவுடனான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக ஆட்சியின் ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுத்தடுத்து ஆதாரங்களோடு வெளியிட்டு வருகிறார். இதனை கண்டிக்கும் வகையில் திமுகவும் பதிலடி கொடுத்து வருகிறது.
இதனிடையே, திருவாரூரில் உள்ள ஒரு தெருவிற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரை சூட்ட திமுக முடிவு எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டதை தொடர்ந்து, இந்த விவகாரத்தை திமுக அப்படியே விட்டு விட்டது.
இந்த நிலையில், திருவாரூர் தெற்கு வீதியில் திராவிடர் கழகம் சார்பில் நடந்த திராவிட மாடல் விளக்க மாபெரும் மாநாட்டில் திமுக எம்பி ஆர்எஸ் பாரதி கலந்து கொண்டு பேசினார். அப்போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சித்து பேசினார். மேலும் திருவாரூரில் தெற்கு வீதிக்கு கலைஞர் பெயர் சூட்டக்கூடாது என அண்ணாமலை பேசியதாகவும், இந்த இடத்தில் அப்படி பேசிய அண்ணாமலை உதை வாங்காமல் போயிருக்கிறார் என்றால் அதனை நினைந்து வெட்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.
திமுக எம்பி ஆர்எஸ் பாரதியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக,
பாஜக மாநில துணை தலைவர் நாரயணன் திருப்பதி டுவிட் வெளியிட்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “திருவாருர் வீதியிலே வந்து கருணாநிதி பெயரை சூட்டக்கூடாது என்று சொல்லி விட்டு உதை வாங்காது போயிருக்கிறான் என்று சொன்னால் அதை கண்டு வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன். இந்த மாநாடு அந்த உணர்வை மீண்டும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என ஆர்.எஸ்.பாரதி பேசியிருப்பதாக கூறியுள்ளார்.
அண்ணாமலையை பார்த்து நடுநடுங்கி, அச்சத்தில் உளறிகொட்டும் ஆர்எஸ் பாரதி அவர்களே, அண்ணாமலை மீது கை வைத்து பாருங்கள்.இன்னும் வேதனைப்படுவீர்கள். இந்த மிரட்டல்களையெல்லாம் வேறு எங்காவது வைத்து கொள்ளுங்கள். வன்முறையை தூண்டுவதை விட்டு விடுங்கள், இல்லையேல் மேலும் வெட்கப்படுவீர்கள்,” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.