டெல்லி : திமுக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியனிடம் இருந்து உயர்ரக செல்போன் திருடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற இரு அவைகளில் 7 எம்பிக்களுக்கு மேல் உள்ள கட்சிகளுக்கு டெல்லியில் அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்கி கடந்த 2006ம் ஆண்டு மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி திமுகவுக்கு டெல்லியில் உள்ள தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் நிலம் வழங்கப்பட்டது. இதையடுத்து அங்கு திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலயம் கட்டும் பணிகள் தொடங்கின.
சுமார் 8 ஆயிரம் சதுர அடியில் 3 தளங்களுடன் இந்த அலுவலகம் கட்டப்பட்டு, நுழைவு வாயிலில் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கலைஞரின் மார்பளவு சிலைகள் அமைக்கப்பட்டன.
இதையடுத்து இன்று மாலை 5 மணிக்கு திமுக அலுவலகத்தை ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சியினர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனின் செல்போன் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. திறப்பு விழாவில் பங்கேற்ற போது கூட்டத்தில் இருந்த மர்மநபர்கள் அவரது கைப்பையில் (Hand Bag)வைத்திருந்த விலை உயர்ந்த ஐபோனை எடுத்து சென்றார்களா அல்லது மாயமானதா என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை.
இதையடுத்து செல்போன் மாயமானதாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.