ஆட்சி அதிகாரத்தை வைத்து அதிமுக, பாஜகவை வீழ்த்த திமுக சதி : ஜிகே வாசன் பகீர் குற்றச்சாட்டு!!!

தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக ஈரோட்டில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வர்ப்பட்டு 90 சதவீத பணிகள் முடிவு பெற்று அத்திக்கிடவு அவினாசி திட்டப் பணிகள் உள்ள நிலையில் திமுக அரசு பொறுப்பு ஏற்றதில் இருந்து தாமப்படுத்தி வருவதாக விமர்சித்தார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு உள்ளது.சாராயம், போதை பொருட்கள், தவறான டாஸ்மாக் விற்பனை,ஆகியவை அதிகரித்து உள்ளது. இதனை தடுத்து நிறுத்த தவறியதால் தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கேட்டு உள்ளதாக குற்றம்சாட்டினார்.

நீட் தேர்வு பற்றி மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் தமிழக அரசு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அதனையும் தாண்டி நீட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்து உள்ளதாக கூறினார்.

இந்திய அளவில் நீட் தேர்வில் சாதனை படைத்த தமிழக மாணவர்களை தமிழக அரசு பாராட்ட வில்லையெனவும் கூறினார். அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகளை கைது செய்ததற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தவர், ஆபத்தாக பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு குரல் கொடுத்தால் அது தவறாக உள்ளது கூறினால் அவர் மீது வழக்கு தொடரப்படுவதாக கூறினார். பாஜக ,அதிமுக ,தமாக ஆகிய கூட்டணி கட்சிகளின் வரும்கால வெற்றியை ஜீரணிக்க முடியாமல்,

திமுக கூட்டணி எங்கள் கூட்டணி மீது அவதூறு பேச தொடங்கி உள்ளதாகவும் தெரிவித்தார். திமுக கூட்டணியில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. ஆட்சியாளர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி வரும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் இருந்து எங்களை முடக்கி விடலாம் என்று நினைப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

பாஜக 9 ஆண்டுகள் ஆட்சியை மத்தியில் நிறைவு செய்து இருக்கிறது, பாஜக ஆட்சியில் பாதுகாப்பு ,வளர்ச்சி ஆகியவை அதிகரித்து உள்ளது. மீண்டும் பாஜக ஆட்சி அமையும்.கொரோனோ நேரத்தில் மக்களின் நம்பிக்கையை பாஜக பெற்று உள்ளதாக தெரிவித்தார்.

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சோதனை செய்து அமலாக்க துறை கைது செய்து உள்ளது. தவறு செய்தவர்களை குற்றம் செய்தவர்களை திமுக தியாகி போல் சித்தரிக்க முயற்சி செய்கிறது.

அவரை மீண்டும் அமைச்சராக அரசு முயற்சி செய்கிறது ஆனால் மக்கள் இதனை விரும்ப மாட்டார்கள். பாஜக, அதிமுக ,தமாக ஆகிய கூட்டணி கட்சிகள் மக்கள் விரும்பும் கூட்டணி கட்சியாக இருக்கிறது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை மக்கள் வெறுக்கும் கட்சியாக உள்ளதாக தெரிவித்தார்.

திருடனுக்கு உதவுபவர்கள் நல்லவர்களாக ஒரு போதும் இருக்க மாட்டார்கள். மத்திய அரசின் சிபிஐ போன்ற பிரிவுகள் சோதனைக்கு வரும் தமிழக அரசிடம் அனுமதி கேட்டு வந்தால் இப்படி தான் இருக்கும்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

9 hours ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

11 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

11 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

12 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

12 hours ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

13 hours ago

This website uses cookies.