தமிழகத்தில் திமுக அரசுக்கும்- ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆளுநருக்கு எதிராக புகார் தெரிவித்து குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
மேலும் அந்த கடிதத்தில் ஆளுநர் பதவிக்கே தகுதியில்லாதவர் எனவும் கடுமையாக விமர்சனர் செய்தார். இந்தநிலையில் 6 நாட்கள் பயணமாக டெல்லி சென்றிருந்த ஆளுநர் ரவி, மத்திய உள்துறை அமைச்சர், உள்துறை அமைச்சக அதிகாரிகள், சட்டத்துறை அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த பரபரப்புக்கு மத்தியில் பாஜக ஆட்சியை எதிர்ப்பதால் திமுக ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் அதைப்பற்றி கவலை இல்லையென முதலமைச்சர் ஸ்டாலின் பகிரங்கமாக தெரிவித்து இருந்தார். இதற்கிடையே 6 நாட்கள் பயணத்தை முடித்து விட்டு ஆளுநர் ரவி நேற்று சென்னை திரும்பியுள்ளார்.
இதற்கிடையே செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையில் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நாளைய தினம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இது தொடர்பாக டுவிட்டர் பதிவிட்ட பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, திமுக வின் ஆட்டம் இன்னமும் 48 மணி நேரம்தான்.
செந்தில் பாலாஜி இருக்கிறாரா? இருந்தால் காவிரி மருத்துவ மணையில் தான் உள்ளாரா என்கின்ற பல சந்தேகங்கள் தீர்க்கப்படும் நேரம் நெருங்கி விட்டது. தமிழக அரசின் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வரும். ஆட்டம் முடிவிற்கு வருமா அல்லது ஆட்சியேவா? என எச்.ராஜா கூறியிருந்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.