தள்ளுபடி பண்ணுவாங்க-னு நகை கடன் வாங்கினால் உருப்படுமா..? என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 70ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவானது வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடந்தது. இதில், தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
இவ்விழாவில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், வில்வநாதன் அமுலு, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்,மண்டல குழுதலைவர் புஷ்பலதா, கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் குண ஐயப்பதுரை உள்ளிட்ட திரளானோரும், பொதுமக்களும் பங்கேற்றனர்.
இவ்விழாவில் கூட்டுறவு உறுதிமொழி எடுக்கப்பட்டு, பின்னர் பயனாளிகளுக்கு ரூ.17. 42 கோடி மதிப்பில் கடனுதவிகளை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
விழாவில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது :- கடனை நாங்கள் கொடுக்கிறோம். அதனை திருப்பி கட்ட வேண்டும் என்பதை விட ரத்து செய்ய வேண்டும் என்ற கோஷம் தான் அதிகம் உள்ளது. அப்படி இருந்தால் துறையும் நிக்காது, அரசாங்கமும் நிக்காது. நீங்கள் வாங்கிய கடனை கட்ட வேண்டும். ஆனால் சேட்டிடம் கடன் வாங்கினால் மட்டும் கடனை கட்டுகிறீர்கள். சும்மா நகையை வைத்து பணத்தை சும்மா வாங்கி சென்றுவிட்டீர்கள்.
என்னுடைய தாழ்மையான கோரிக்கை கடனை வாங்கினால் அதனை திருப்பி கட்ட வேண்டும். ஆனால், கடனை வாங்குவோம் தள்ளுபடி செய்வார்கள் என்ற எண்ணத்தில் கூட்டுறவுத்துறையில் கடனை வாங்குகின்றனர். அதிக அளவில் கூட்டுறவுத்துறை, பகுதி நேர நியாய விலைகடைகளை திறந்துள்ளனர் பாராட்டுகிறோம். இன்றைக்கு 2547 பேருக்கு கடனாக ரூ.17.42 கோடி அளிக்கிறோம். அது எள்ளு என்றால், நீங்கள் எள்ளை கேட்டால் எண்ணெய்யாக கொடுப்பார். கூட்டுறவுத்துறை அதை தான் சொன்னேன், வாங்கினால் கடனை சரியாக கட்டுங்கள், என பேசினார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.