நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி தமிழகத்தின் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, வீட்டில் தேசிய கொடியேற்றினார்.
நாட்டின் 75வது சுதந்திர தினம் மத்திய அரசு நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட ஏற்பட செய்யப்பட்டுள்ளது. இதற்காக, பல்வேறு அறிவிப்புகளும், சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், ‘சுதந்திர தின அமிர்த பெருவிழா’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ‘இல்லம் தோறும் தேசிய கொடி’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் சுதந்திர தினமான 15-ந் தேதி வரையிலான 3 நாட்கள் தங்கள் வீடுகளில் பொதுமக்கள் மூவர்ண கொடியை பட்டொளி வீசி பறக்கச் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதனையேற்று பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வீட்டில் இன்று தேசியக் கொடி ஏற்றினார்.
அதேபோல, தமிழக நடிகர்களில் தேசப்பற்று மிக்கவராக காட்டிக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த், தனது வீட்டின் முன்பு தேசியக்கொடியை பறக்கவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, நடிகர் மோகன்லாலும் தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றி, சல்யூட் அடித்தார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.