புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் கைதுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மின்கட்டண உயர்வைக் கண்டித்து விருதுநகரில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் வைத்து ஆதரவாளர்களுடன் அவர் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணசாமி கைது செய்யப்பட்டதற்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- மின்கட்டண உயர்வை திரும்பப் பெறவும்,மாதம் ஒருமுறை மின் பயன்பாட்டு அளவை எடுத்திடவும்,தடையில்லா மின்சாரம் வழங்கிடவும் வலியுறுத்தி,முறையாக அனுமதிபெற்று புதிய தமிழகம் கட்சியின் சார்பில் விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் தலைமை ஏற்க சென்ற அதன் நிறுவன தலைவர் டாக்டர் திரு. கிருஷ்ணசாமி, அவர்களை கைது செய்துள்ளது ஜனநாயகத்திற்கு விரோதமானது.
இந்த பாசிச கொடுங்கோல் திமுக ஆட்சியின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன். அடக்குமுறைகளால் எல்லோரையும் அடக்கிவிடலாம் என நினைக்கும் இழிகுணத்தை இந்த அரசு கைவிட வேண்டும். இல்லையேல், இது மக்கள் போராட்டமாக மாறும், எனக் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.