சென்னையில் தானாக வடிந்த தண்ணீரை, தாங்களே அகற்றிவிட்டதாக திமுக நாடகமாடுவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் தினமும் காலை தொடங்கி இரவு வரை மழை வெளுத்து வாங்கி வருகிறது.
அதேபோல, அதன் அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் விடியவிடிய மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசும், மீட்பு பணிகளில் ஈடுபட்டாலும், பல இடங்களில் இன்னமும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.மழை வெள்ளத்தை மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மழையால் பாதிக்கப்பட்ட ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட முகலிவாக்கம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- வடகிழக்கு பருவமழை தொடங்கி இதுவரை, சென்னையில் பெரியளவில் கனமழை பெய்யவில்லை ; மிதமான அளவில்தான் மழை பெய்துள்ளது. சென்னை பெருநகரில் 7 செ.மீ. வரையில் மழை பெய்தால் அது தானாக வடிந்துவிடும். ஆனால், தற்போது மழைநீரை அகற்றி விட்டோம் என்கிறார்கள்.
அதிமுக ஆட்சியில் படகில் வந்தார்கள் என்றார்கள். ஆனால், இன்று படகுகளில் மீட்கப்படும் காட்சியை நீங்களே பார்க்கிறீர்கள். சென்னையில் ஆங்காங்கே குளம்போல மழைநீர் தேங்கியுள்ளது ; மழைநீர் வடிந்துவிட்டதாக ஆளும் தரப்பில் செய்தியை வெளியிட்டு வருகின்றனர்.
மழை, வெள்ளம் சூழ்ந்திருக்கும் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவிகள் நேரில் வழங்கப்படவில்லை ; பெரும்பாலான இடங்களில் மருத்துவ முகாம்கள் கூட ஏற்படுத்தப்படவில்லை, எனக் கூறினார்.
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
This website uses cookies.