நிதியமைச்சர் மகனுக்கு அமலாக்கத்துறை வைத்த செக் : ஆடிப்போன ஆளுங்கட்சி… அரசியலில் பரபரப்பு!!!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. அம்மாநிலத்தின் நிதியமைச்சராக இருப்பவர் ராமேஷ்வர் ஓரான்.
இவரது மகன் ரோஹித் ஓரானுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். ரோஹித் ஓரானுக்கு சொந்தமான இடங்களில் மதுபான கடைகள் உரிமம் தொடர்பான பண மோசடி வழக்கு தொடர்பாக சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராஞ்சி, தும்கா, தியோகார் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள ரோஹித் ஓரானுக்கு தொடர்புடைய இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக, ஆகஸ்ட் 14 அன்று, நில மோசடி வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறையால் சம்மன் அனுப்பப்பட்டது.
இருப்பினும், மாநிலத்தில் சுதந்திர தின விழாவுக்குத் தயாராக வேண்டியதை காரணம் காட்டி அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள சோரன், மத்திய அரசுடன் ஒத்துப் போகாததால் மத்திய அமைப்புகள் தம்மை குறிவைப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.