ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வந்த நிலையில் வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தற்போது ஈரோடு மாநகர எம்.ஜி.ஆர். மன்ற தலைவராக பதவி வகித்து வரும் கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
65 வயதான தென்னரசு இதற்கு முன்பு அதே தொகுதியில் 2016ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது இந்த கூட்டத்தில் பேசிய எஸ்பி வேலுமணி, கடுமையான போட்டி நிலவியதால் அதிமுக வேட்பாளர் தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது என்று விளக்கம் அளித்தார்.
இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியில் யாருக்கு ஆதரவு தருவது, பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து நேற்று அண்ணாமலை தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த, பாஜக துணைத் தலைவர் நாரயாணன் திருப்பதி, ஓரிரு நாளில் பாஜக முடிவு வெளியிடப்படும் என்றும், அதிமுக காத்திருப்பதில் தவறில்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.