ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வந்த நிலையில் வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தற்போது ஈரோடு மாநகர எம்.ஜி.ஆர். மன்ற தலைவராக பதவி வகித்து வரும் கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
65 வயதான தென்னரசு இதற்கு முன்பு அதே தொகுதியில் 2016ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது இந்த கூட்டத்தில் பேசிய எஸ்பி வேலுமணி, கடுமையான போட்டி நிலவியதால் அதிமுக வேட்பாளர் தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது என்று விளக்கம் அளித்தார்.
இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியில் யாருக்கு ஆதரவு தருவது, பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து நேற்று அண்ணாமலை தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த, பாஜக துணைத் தலைவர் நாரயாணன் திருப்பதி, ஓரிரு நாளில் பாஜக முடிவு வெளியிடப்படும் என்றும், அதிமுக காத்திருப்பதில் தவறில்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.