சென்னை : திமுக அரசின் பிடியில் இருந்து எப்பொழுது விடுதலை கிடைக்கும் என மக்கள் எதிர்பார்ப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுகவை கடுமையாக சாடியுள்ளார்.
சென்னை திரு.வி.க நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு ஆடுதொட்டி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பிரியாணி வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் கூறியதாவது:- கடந்த இரண்டு தினங்களாக பெய்த மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக ஒன்றும் செய்யவில்லை. இரண்டு நாள் மழைக்கே திமுக கதறுகிறது. தண்ணீர் ஓரளவு வற்றி இருப்பதற்கு காரணமே அதிமுக எடுத்த நடவடிக்கை தான். மழையால் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு திமுக அரசு உரிய உதவிகளை செய்யவில்லை. மழை நவம்பர், டிசம்பர் மாதம் வரை இருக்கும்.
அறநிலைய துறை அமைச்சராக இருப்பதால் சேகர்பாபு முதலமைச்சருக்கு சிங்சாங் சிங்சாங் அடித்து திருப்திபடுத்த பேசி வருகிறார். முதலமைச்சர் திட்டங்களை நிறைவேற்றி விட்டதாக கூறி வருவது யாருடைய திட்டங்கள்? அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள். 2 ஆயிரம் கி.மீ. மழை நீர் வடிகால்வாய் பணியை பாதிக்கும் மேல் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. மீதி பணியை தான் திமுக நிறைவேற்றியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அதி நவீன கருவிகள் கொண்டு தூர்வாரப்பட்டது. மழைக்காலத்தில் இலவசமாக உணவு வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் இலவசமாக உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டதா..?
கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே திமுக அரசை காப்பாற்றியுள்ளது. சிங்கார சென்னையை வாந்தி பேதி, டெங்கு, மர்ம காய்ச்சல் என்ற நிலைக்கு தான் 2006 – 11ல் சென்னையை வைத்திருந்தனர். வாய்ச்சொல் வீரர்களாக, விளம்பர பிரியராக முதலமைச்சர் செயல்படுகிறார்.
கன்னித்தீவா கொளத்தூர் தொகுதி? கொளத்தூர் இல்லை, குளம் ஊர் ஆக தான் உள்ளது. திமுக அரசின் பிடியில் இருந்து எப்பொழுது விடுதலை கிடைக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். விரைவில் நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் கண்டிப்பாக வரும். அதில் அதிமுக வெற்றி பெறும்.
ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை…
வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை…
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. தனுஷ் தனது…
டிரெண்டிங் இசையமைப்பாளர் தமிழ் சினிமா உலகில் தற்போது டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அப்யங்கர். “கட்சி சேர” என்ற…
மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்த…
திரிஷ்யம் படத்தின் ரீமேக் 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான திரைப்படம்…
This website uses cookies.