மக்களுக்காக நிறைய திட்டங்களை செய்திருந்தால் திமுக நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட முடியுமா? என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருநெல்வேலி மக்களுக்காக அரிசி, சேலை, கைலி, போர்வை, துண்டு, பாய், பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்களை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு 2 லாரிகள் மூலம் அனுப்பி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறியதாவது :- மழை, வெள்ள பாதிப்புகளுக்கு அரசுத்துறை அதிகாரிகள் பலிகடாக ஆக்கப்படுகிறார்கள். தென் மாவட்டங்களில் 4 மாவட்ட மழை, வெள்ளப் பணிகளில் ஒரே ஒரு அமைச்சர் மட்டுமே ஈடுபட்டு வருகிறார். பிற அமைச்சர்கள் திமுக மாநாட்டு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல மழை வெள்ளத்தில் திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை மழை வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து போதுமானது அல்ல, மக்கள் பாராட்ட வேண்டும். கன மழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.
தமிழகம் முழுவதும் மழை வெள்ளமாக நிகழக்கூடிய நேரத்தில் திமுக மாநாடு நடத்த வேண்டுமா?, திமுக மாநாடு நடத்தி என்ன செய்யப் போகிறார்கள், திமுக அரசு நிர்வாக திறனற்ற அரசாக, விளம்பர அரசாக செயல்படுகிறது. சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக என்ன செய்தது?, எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதிமுக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அளித்து வருகிறோம்.
2015ல் நிகழ்ந்த மழை வெள்ளத்தில் மக்களுக்கு நிறைய நிவாரணப் பணிகள் செய்ததால் தான் 2016 ஆம் ஆண்டு தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். மக்களுக்காக நிறைய திட்டங்களை செய்திருந்தால் திமுக நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட முடியுமா?, என கூறினார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.