சென்னை, கோவையில் திமுகவினர் வாக்குப்பதிவின் போது வன்முறைகளை கட்டிவிழ்த்துவிட்டதாகவும், கள்ள ஓட்டுகளை திமுகவினர் பதிவு செய்துள்ளனர் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. ஆனால் சென்னையில் குறைவான வாக்குகளே பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனையடுத்து,தேர்தலில் பதிவான வாக்குகள் வருன்ற பிப்.22 ஆம் தேதி எண்ணப்படவுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை, சென்னை மாநகராட்சிகளில் அதிக இடங்களில் வன்முறை நிகழ்ந்துள்ளன என்றும், குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் பல வார்டுகளில் உள்ள பூத்களில் கள்ள ஓட்டுகளை திமுகவினர் பதிவு செய்துள்ளனர் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக,சேலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:
“தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை,சென்னை மாநகராட்சிகளில் அதிக இடங்களில் வன்முறை நிகழ்ந்துள்ளன.குறிப்பாக,சென்னை மாநகராட்சியில் பல வார்டுகளில் உள்ள பூத்களில் கள்ள ஓட்டுகளை திமுகவினர் பதிவு செய்துள்ளனர்.
அவர்கள் தோல்வியை தழுவும் பயத்தின் காரணமாக சென்னை மாநகராட்சிகளில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளில் அத்துமீறி புகுந்து இப்படி கள்ள ஓட்டுக்களை பதிவு செய்துள்ளார்கள்.கோவை,சென்னை மாநகராட்சிகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தவில்லை .
காவல்துறையினர் முன்னிலையிலேயே திமுகவினர் அவர்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார்கள்.திமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று பணம் பட்டுவாடா செய்தார்கள்.மேலும் திருவல்லிக்கேணியில் உள்ள 114,115 வது வார்டுகளில் திமுகவினர் கள்ள ஓட்டு லுத்தியுள்ளார்கள்.மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது என்று கூறி அதிகாரிகளை மிரட்டுகிறார்கள்.
குறிப்பாக,தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள காரணத்தால்தான், அச்சத்தில் மக்கள் வாக்களிக்க வரவில்லை “,என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.