சென்னை அருகே பிரபல ரவுடி நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அயப்பாக்கத்தை சேர்ந்த பிரபல ரவுடியான சந்தீப்குமார் (30) மீது அண்ணாநகர் காவல் நிலையத்தில் கொலை, அடிதடி உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் நேற்று மாலை அண்ணாநகர், மடுவாங்கரை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அங்கு, உறவினர்களிடம் பேசிவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு கிளம்பியுள்ளார்.
இதனைக் கண்ட 10 பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து, அரிவாள், பட்டாக்கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்ட முயன்றது. இதனால், அதிர்ந்து போன அவர், தன்னை யாராவது காப்பாற்றுமாறு அலறி கூச்சலிட்டு நடுரோட்டில் ஓடியுள்ளார். ஆனால், யாரும் உதவ முன்வராததால், அந்த மர்ம கும்பல் அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது.
அதில், படுகாயமடைந்த சந்தீப் குமார் ரத்தவெள்ளத்தில் மயங்கி சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், அங்கிருந்து அந்த மர்ம கும்பல் ஓட்டம் பிடித்தது. இது குறித்து தகவலறிந்த அண்ணாநகர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சந்தீப்பின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த 2018ல் ரவுடி ஆதித்யா என்பவரை கொலை செய்த வழக்கில் சிறை சென்று விட்டு வெளியே வந்த சந்தீப் குமாரை பழிக்குபழி தீர்க்க இந்தக் கொலை நடந்ததா..? அல்லது நண்பர்களுடன் மது அருந்தும் போது ஏற்பட்ட மோதலின் காரணமாக இந்த கொலை அரங்கேற்றப்பட்டதா..? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.