சென்னை: முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரமரத்தின் மகனும் எம்பியுமான கார்த்தி சிதம்பரத்தின் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியா வெளிநாட்டிலிருந்து பணம் பெற உதவியதாக சிபிஐ-ல் ஏற்கெனவே வழக்கு இருந்தது.
இந்த வழக்கில் 4 முறை சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தின் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி இருந்தனர். இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கில் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ போலீசார் ஏற்கனவே கைது செய்து இருந்தனர்.
இந்நிலையில் ப.சிதம்பரத்தின் மகனும் சிவங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் ப. சிதம்பரத்திற்கு சொந்தமான 7 இடங்களில் ரெய்டு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
அதேநேரம் எந்த வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.