சென்னை : பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் தனி தகவல் தொழில்நுட்ப பிரிவு தன்னைப்பற்றி தவறாக சித்தரித்து சமூக வளைத்தளத்தில் பரப்புவதாக நடிகை காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காயத்ரி ரகுராம் ஆகிய தனது புகைப்படத்தை சித்தரித்து வெளியிட்ட பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி நடிகை காயத்ரி ரகுராம் அவர்கள் புகார் அளித்துள்ளார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், ராணிப்பேட்டை மாவட்ட பாஜக நிர்வாகி பாபு என்பவர் தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதாகவும், அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பிறகு பிரச்சினை குறித்து புகார் அளித்த பின்னர் அவரை கட்சியிலிருந்து நீக்கியதாகவும், தான் பாஜகவில் இருந்த போது பாஜக கட்சியில் தனக்கும், சில கட்சி பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதால் அறிந்து கொண்டு கட்சியிலிருந்து விலகியதாக கூறினார்.
தன் படத்தை தவறாக சித்தரித்து சமூக வளைத்தளத்தில் பரப்பப்பட்டு வருவதாகவும், இதற்கு அண்ணாமலையின் தனி தகவல் தொழில் நுட்ப பிரிவு தான் காரணம் என தெரிவித்தார். அண்ணாமலை பாஜக மாநில தலைவராக பொறுப்பு ஏற்றதிலிருந்து பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறினார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையில் செயல்பாடுகள் தவறாகவும், தன்னை கொச்சையாக பேசி வருவதாக குற்றம்சாட்டினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.