குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்த முக்கியமான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜுலை மாதம் 22ம் தேதி, 397 கிராம நிர்வாக அலுவலர், 2 ஆயிரத்து 792 இளநிலை உதவியாளர், 34 வரித்தண்டலர், 509 நில அளவையர், 74 வரைவாளர், ஆயிரத்து 901 தட்டச்சர், 784 சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 18 லட்சத்து 50 ஆயிரத்து 471 பேர் எழுதினர்.
தேர்வுக்கான அறிவிப்பு வரும்போதே, அக்டோபர் மாதத்தில் தேர்வு முடிவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பெண்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கின் உயர்நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஆகும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வு முடிவு வெளியாகும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தேர்வு முடிவுகள் அப்போதும் முடிவுகள் வெளியாகவில்லை. இதைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவை வெளியிட வாய்ப்பு இருப்பதாக தேர்வாணையம் அறிவித்தது. ஆனால், அப்போதும் வெளியாகவில்லை.
இதனிடையே, மார்ச் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருந்தாலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கையில் கூடுதலாக இடங்கள் சேர்க்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தேர்வு முடிவை வெளியிடக்கோரி டுவிட்டரில் ‘வி வான்ட் குரூப்4 ரிசல்ட்’ என்ற ஹேஷ்டேகை தேர்வை எழுதிய தேர்வர்கள் டிரெண்டாக்கினர். மீம்ஸ் போட்டும் நகைச்சுவையாக தங்களின் ஆதாங்கத்தை வெளிப்படுத்தினர்.
இந்தநிலையில், கடந்தாண்டு ஜூலை 24-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்றும், தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் துரிய கதியில் நடைபெற்று வருவதாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
This website uses cookies.