பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்று இரவு முழுவதும் சிவராத்திரி விழாவில் பாட்டு பாடி இறை வழிபாடு நடத்தி வந்த நிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
சென்னை, வடபழனியில் உள்ள மயில்சாமியின் வீட்டில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர், தயாரிப்பாளர், விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் மயில்சாமியின் மறைவை அறிந்து மிகவும் வேதனைப்பட்ட நிலையில், நேரில் சென்று அவரது திருவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் மயில்சாமி உடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
மயில்சாமி எனக்கு ஒரு அண்ணன் மாதிரியே இருந்தார். எப்போதும் சிரித்த முகத்துடனே பேசுவார். அவரது மறைவு செய்தி அறிந்ததுமே ரொம்ப அதிர்ச்சியாகிட்டேன். அவரது இழப்பு தமிழ் சினிமாவுக்கு நிச்சயமாக பேரிழப்பு தான் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்தில் போலீஸ் அதிகாரியாக மயில்சாமி நடித்திருப்பார். மொத்தம் 50 நாட்கள் அந்த படம் எடுக்கப்பட்டது. அதில், 40 நாட்கள் என்னுடனே அவர் டிராவல் செய்தார். அவருடைய நல்ல மனசை பலரும் பாராட்டி உள்ளனர் என நெஞ்சுக்கு நீதி படத்தில் மயில்சாமி உடன் நடித்த அனுபவங்களையும் பகிர்ந்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
பல கோடி ரசிகர்களை தனது நகைச்சுவை திறனால் சிரிக்க வைத்து வந்த மயில்சாமி ஏகப்பட்ட மக்களுக்கு தன்னால் இயன்ற பண உதவிகளையும் செய்துள்ளார். மயில்சாமியின் வீட்டுக்கு அருகே உள்ள பொதுமக்கள், ரசிகர்கள் என பலரும் கண்ணீர் மல்க மயில்சாமிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என தொடர்ந்து மயில்சாமியின் வீட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.