ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவரை பலாத்காரம் செய்து கொலை செய்த 4 பேரை என்கவுண்ட்டர் செய்த போலீசாருக்கு தற்போது சிக்கல் உருவாகியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு பெண் கால்நடை மருத்துவரை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, அவரை கொலை செய்து உடலையும் எரித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்த போலீசார், அவர்கள் நால்வரையும் என்கவுண்ட்டர் செய்தது. போலீசாரின் பிடியில் இருந்து தப்பியோட முயன்ற போது அவர்களை என்கவுண்ட்டர் செய்ய நேர்ந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த என்கவுண்ட்டர் குறித்து விசாரணை நடத்த 3 பேர் அடங்கிய விசாரணை ஆணையத்தை உச்சநீதிமன்றம் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமைத்தது.
இந்த நிலையில், என்கவுண்ட்டர் சம்பவம் போலியானது என்று விசாரணை ஆணையம் அறிக்கை சமர்பித்தது. குற்றம்சாட்டப்பட்டவர்களை கொலை செய்யும் நோக்கிலேயே இந்த என்கவுண்ட்டர் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த சூப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 10 காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யவும் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
விசாரணை ஆணையத்தின் இந்த அறிக்கை தெலுங்கானா போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.