உங்களுக்கு நான் இருக்கிறேன்.. பயப்பட வேண்டாம் : பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெம்பு கொடுத்த அண்ணாமலை!!
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் நாரவாரி குப்பம் புழல் ஏரியை ஒட்டிய பகுதியில் மழை நீர் கால்வாயை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டு மழையால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் இன மக்கள் பொதுமக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
நலத்திட்ட உதவிகள் வழங்க வந்தபோது வள்ளலார் நகர் ஏரிக்கரை தெருவில் வசிக்கும் நரிக்குறவர் மக்கள் பாசிமணி அணிவித்தும் மாலை அணிவித்தும் அப்பகுதி மக்கள் மலர் தூவியும் உற்சாகமாக அவரை வரவேற்றனர்.
உங்களுக்கு நான் இருக்கிறேன் பயப்பட வேண்டாம் என ஆறுதல் தெரிவித்த அவர், புயல் கனமழையில் பாதித்த இடங்களில் அரசு செல்லாத இடங்களில் நாங்கள் சென்று நிவாரண பொருட்களை கொடுக்க ஆரம்பித்துள்ளதாகவும் அரசு இன்னும் வேகமாக செயல்பட வேண்டும் என்றும் மக்களின் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மக்கள் பிரதிநிதிகள் களத்தில் இல்லை என்பது புகாராக உள்ளது.
யாரிடம் பிரச்சினைகளை மக்கள் சொல்வார்கள் முகாமில் உள்ள கழிவறைகளில் தண்ணீர் வரவில்லை என்றால் மக்கள் என்ன செய்வார்கள். அதிகாரிகளை முழுமையாக களத்தில் இறக்க அரசால் முடியவில்லை மக்களின் கோபத்திற்கு ஆளாகிறார்கள்.
ஆளும் கட்சியினரை பார்க்க முடிவதில்லை. பாஜக இன்னும் வேகமாக தங்களது பணிகளை துரிதப்படுத்துகிறது. உணவுக்கு குடிநீருக்கு பஞ்சம் இல்லாமல் செய்ய வேண்டும் அரசு இயந்திரம் வேதப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.