டிரெண்டிங்

உதயநிதி துணை முதல்வர் என்ற அறிவிப்புக்காக காத்திருக்கிறேன் : அமைச்சர் தா.மோ.அன்பரசன்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி திடலில் வரும் 28ம்தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

கூட்டத்துக்கு, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமை வகிக்கிறார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான க.சுந்தரம் வரவேற்புரையாற்றுகிறார்.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் முன்னிலை வகிக்கிறார். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார்.

இந்த கூட்டத்தில் கி. வீரமணி, இரா. முத்தரசன், எம்.எச்.ஜவாஹிருல்லா பொன்.குமார் கருணாஸ், கு. செல்வப்பெருந்தகை, வைகோ, கே.எம்.காதர்மொய்தீன், ஈ.ஆர்.ஈஸ்வரன், எர்ணாவூர் நாராயணன், அதியமான், தொல். திருமாவளவன், தி.வேல்முருகன், முருகவேல் ராஜன், திருப்பூர் அல்தாப், கே. பாலகிருஷ்ணன், கமல்ஹாசன், ஜி.எம்.தர் வாண்டையார், தமீமுன் அன்சாரி, பி.என்.அம்மாவாசி என முக்கியத் தலைவர்கள் பங்கேற்று வாழ்த்துரை என்ன தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் முக்கிய நிகழ்ச்சி என்பதால் , திமுகவின் பவள விழா பொதுக்கூட்டம் கவனம் பெற்றுள்ளது. இது தொடர்பாக திமுக பவள விழா பொதுக்கூட்டம் இடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார்.

இன்று நத்தப்பேட்டை பகுதியில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், எழிலரசன், ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனை அடுத்த செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் ஆய்வு மேற்கொண்டோம். மிக பிரம்மாண்டமான முறையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படியுங்க: பாரதமாதா உயிரோடு இருந்திருந்தால் அவரையும் பலாத்காரம் செய்து கொன்றிருப்பார்கள்… சீமான் சர்ச்சை பேச்சால் சலசலப்பு!

உதயநிதி ஸ்டாலின் முதன்மை முதலமைச்சராக அறிவிக்கப்படுவார்களா என செய்தியாளர்களின் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில் , செப்.28ஆம் தேதி நடைபெற உள்ள திமுக பவள பொதுக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

அல்லது இன்னும் ஓரிரு நாட்களோ அல்லது 10 நாட்களுக்குள் துணை முதலமைச்சராக அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் அறிவிப்புகாக , காத்துக் இருப்பதாக தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.