சேலம் அருகே தவணை தொகையை செலுத்தாததால் கூலித் தொழிலாளியின் மனைவியி IDFC வங்கி சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாழப்பாடி அருகே துக்கியம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவர் IDFC வங்கியில் ரூ.35 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். வாரம் 770 ரூபாய் வீதம் 52 வார தவணைகளில் பணத்தை திருப்பி செலுத்தும் விதமாக இந்த கடன் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க: ஜவுளிக்கடையில் புகுந்த கும்பல்… பெண்ணுக்கு பின்பு நின்றிருந்த நபர் செய்த காரியம் ; அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!!
இந்த சூழலில், இந்த வாரக் கடனை வசூலிக்க வங்கி ஊழியர் பிரசாந்தின் வீட்டுக்கு சென்றுள்ளனர். ஆனால், கடன் தவணையை செலுத்த காலதாமதம் ஆனதால், பிராந்த் வீட்டிற்கு சென்ற வங்கி ஊழியர் சுபா என்பவர், வீட்டில் பிரசாந்த் இல்லாததால், அவரது மனைவி கவுரி சங்கரியை, வங்கிக்கு அழைத்து வந்துள்ளார்.
அப்போது, தவணைத் தொகையை செலுத்திவிட்டு உங்களின் கணவர் அழைத்துச் செல்லட்டும் என கவுரிசங்கரிடம் வங்கி ஊழியர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது. இது குறித்து விவரம் அறிந்து வங்கிக்கு வந்த பிரசாந்த், 770 ரூபாய் தவணைத் தொகையை கட்டிவிட்டு மனைவியை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
இதனிடையே, பிரசாந்த் அளித்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட வங்கிக்கு வந்த போலீசார் இருதரப்பிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.