கோவை மாவட்டத்தில் வாக்குப்பதிவு ‘விறு விறு’: பாதுகாப்பு பணியில் 4,500 போலீசார்…436 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை..!!

கோவை: கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணிக்கு துவங்கியுள்ளது. மொத்தம் 3,366 பேர் போட்டியிடும் சூழலில் தேர்தல் பாதுகாப்பு பணியில் பாதுகாப்பு பணியில் 4500 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகள் உள்ளன. மாநகராட்சிகளில் 100 வார்டுகளும், 7 நகராட்சிகளில் 198 வார்டுகளும் மற்றும் 33 பேரூராட்சிகளில் 513 வார்டுகளும் உள்ளன.

தேர்தலை நடத்தும் பொருட்டு மாநகராட்சியில் ஒரு தேர்தல் நடத்தும் அலுவலரும், 20 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 15 பறக்கும் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். நகராட்சிகளில் 7 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 21 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 21 பறக்கும் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பேரூராட்சிகளில் 33 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 66 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் 33 பறக்கும் படையினரும் என மொத்தம் 41 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் 107 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 69 பறக்கும் படையினரும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஒரு வாக்குச்சாவடிக்கு 4 வாக்குச்சாவடி அலுவலர்கள் வீதம் சுமார் 10,172 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 778 வேட்பாளர்களும், 7 நகராட்சிகளில் உள்ள 198 வார்டுகளில் 861 வேட்பாளர்களும், 33 பேரூராட்சிகளில் உள்ள 513 வார்டுகளில் 1,727 வேட்பாளர்கள் என 811 இடங்களுக்கு 3,366 பேர் போட்டியிடுகின்றனர். இதில் பேரூராட்சிகளில் 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டனர். இதையடுத்து பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 513 வார்டுகளில் 504 வார்டுகளுக்கு மட்டுமே இன்று தேர்தல் நடைபெற உள்ளது.

கோவை மாநகராட்சியில் 1290 வாக்குச் சாவடிகளும், 7 நகராட்சிகளில் 390 வாக்குச் சாவடிகளும், 33 பேரூராட்சிகளில் 632 வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 2312 வாக்குச் சாவடிகளுடன் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பணிகளுக்காக 4500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன்னர்.

கோவை மாநகராட்சியில் 181 வாக்குச்சாவடிகளும், நகராட்சிகளில் 112 வாக்குச் சாவடிகளும், பேரூராட்சிகளில் 143 வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 436 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டத்தில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாகவே வாக்குப்பதிவு இயந்திரத்தை சரிபார்க்கும் விதமாக மாதிரி வாக்குப்பதிவு செய்யப்பட்டது. கோவை மாவட்டத்தில் பல வாக்குச்சாவடிகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இல்லாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

UpdateNews360 Rajesh

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

11 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

12 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

13 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

13 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

14 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

14 hours ago

This website uses cookies.