புதுச்சேரியில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்ற இந்து முன்னணி நிர்வாகியும் பாஜக ஆதரவாளருமான திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், இந்துக்களின் ஒற்றுமைக்கான அடையாளமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் உள்ளது. தமிழகத்தை போல் அல்லாமல் புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு எந்த கட்டுப்பாடும் அரசு விதிக்கவில்லை என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் முதலமைச்சர் ரங்கசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தமிழகத்தில் திடீரென ஆன்மீகம் பேசிய ஒருவரை 100 பேர் கைது செய்ய வருகிறார்கள்,ஒரு குற்றவாளியை பிடிப்பது போல் வருகிறார்கள்.
ஆன்மீகத்துக்கு எதிரான ஆட்சியாக தமிழக அரசு உள்ளது. அதனால்தான் பல கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள் என கனல் கண்ணன் தெரிவித்தார்.
பள்ளியில் ஆன்மீகம் சொல்லிக் கொடுக்கக் கூடாது என்பது தவறு. இவ்வளவு நாள் பள்ளியில் அப்படித்தானே சென்றுள்ளது.
ரகுபதி ராஜாராம் என காந்தி சொல்லிதானே பாடுகிறோம். அதை இப்பொழுது தடுக்க முடியுமா …ஆன்மீகம் என்பது சனாதானம்.. சனாதானம் என்பது வாழ்வியல் முறை அதை பள்ளியில் படிப்பது என்ன தவறு என்றார்.
நிறைய பள்ளிகளுக்கு நடுவே தேவாலயங்கள் உள்ளன இதை யாருமே கேட்கவில்லை கேட்டால் தான் மக்கள் திருந்துவார்கள் என கனல் கண்ணன் தெரிவித்தார்.
விநாயகர் சதுர்த்திக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவிக்கவில்லை.
தமிழர்களுக்கு இந்து உணர்வு வர வேண்டும் வாழ்த்து தெரிவிக்காதவர்களுக்கு தான் நாம் ஓட்டு போடுகிறோம் என்ற உணர்வு இந்து மக்களுக்கு வரவேண்டும் என கனல் கண்ணன் கூறினார்.
விஜய் கட்சி ஆரம்பித்து இருப்பதை வரவேற்ற அவர், தமிழகத்திற்கு நல்லது நடந்தால் குறிப்பாக இந்துக்களுக்கு நல்லது நடந்தால் அதனை நல்ல விஷயமாக ஏற்றுக்கொள்வேன் எனவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க: ஆசியாவிலேயே உயரமான விநாயகர் சிலை.. 2 டன் மலர்களால் அலங்கரித்து, 16 வாசன திரவியங்களால் பூஜை!
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.