தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திமுக ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆகியும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. டாஸ்மாக் வருவாயை நம்பித்தான் தமிழக அரசு செயல்படுகிறது. மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடக அரசு சொல்கிறது, தமிழக அரசு தடுக்கவில்லை.
மின்கட்டணம் உயர்வு மூன்று முறை உயர்ந்துள்ளது. இந்தியாவில் எங்குமே 27 மாதத்தில் மூன்று முறை உயர்த்தியதாக வரலாறு கிடையாது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டது. அதற்கான எந்த ஒரு திட்டமிடுதலும் இல்லை.
அவரது நோக்கம் எல்லாம் மோடிக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டும் என்கின்ற நோக்கம். அதனால்தான் மத்திய அரசு திட்டங்கள் இவ்வளவு வந்த போதும் அது பொதுமக்களுக்கு சென்று சேரும் போது ஊழலோடுதான் சென்று சேர்கிறது. அதற்கு காரணம் மாநில அரசுதான்.
தமிழகத்தில் பிரதமர் போட்டியிடுவது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதியாகவிலை. எதிர்க்கட்சிகள் முற்றிலும் முரண்பாடான கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்துள்ளன. உண்மையான இந்தியா, உண்மையான பாரதம் யார் என்பது மக்களுக்கு தெரியும்” என்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.