காஞ்சிபுரம் அருகே உள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குருவிமலை வலத்தோட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் நரேந்திரன் என்பவருக்கு சொந்தமான தனியார் வெடி பொருள் தயாரிக்கும் குடோன் இயங்கி வருகிறது. இந்த குடோனில் 25க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் என பலர் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆலையில் ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்ததால் அனைவரும் வெடிவிபத்தில் சிக்கினர். இதில், 30க்கும் மேற்பட்ட நபர்கள் படுகாயத்துடன் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும், போலீசாரும், தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி, டி ஐ ஜி பகலவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.