குருவிமலை பட்டாசு ஆலையில் திடீர் வெடிவிபத்து… உடல் கருகி பலி 7 பேர் … 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம்.. மீட்பு பணிகள் தீவிரம்

Author: Babu Lakshmanan
22 March 2023, 1:51 pm
Quick Share

காஞ்சிபுரம் அருகே உள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குருவிமலை வலத்தோட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் நரேந்திரன் என்பவருக்கு சொந்தமான தனியார் வெடி பொருள் தயாரிக்கும் குடோன் இயங்கி வருகிறது. இந்த குடோனில் 25க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் என பலர் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆலையில் ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்ததால் அனைவரும் வெடிவிபத்தில் சிக்கினர். இதில், 30க்கும் மேற்பட்ட நபர்கள் படுகாயத்துடன் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும், போலீசாரும், தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி, டி ஐ ஜி பகலவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.

Views: - 485

0

0