கரூரில் நல்ல நிலையில் இருந்த சாலைகளை புதிதாக போட்டதாக கூறி சுமார் 3.5 கோடி வரை மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்த புகாரின் பேரில், பொறியாளர்கள் உள்ளிட்ட 4 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் வால்காட்டு புதூர், காக்காவாடி பிரிவு, நன்னியூர் புதூர், மண்மங்களம், செம்படாபாளையம், புகழூர் உள்ளிட்ட இடங்களில் ஏற்கனவே போடப்பட்டு நல்ல நிலையில் உள்ள சாலைகளை புதிதாக போடப்பட்டதாக கூறி 3.5 கோடி பணம் எடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகுந்த ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
ஆனால், இந்த தகவலை அறிந்த தனியார் ஒப்பந்ததாரர் நிறுவனம் அவசரம், அவசரமாக அப்பகுதிகளில் சாலைகளை போடும் பணியில் ஈடுபட்டனர். அது குறித்தும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அதிமுக சார்பில் முதல்வரின் தனிப்பிரிவு, தலைமை செயலாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் சென்னையிலிருந்து வந்த நெடுஞ்சாலை துறை குழுவினர் இப்பகுதிகளை ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் கரூர் மாவட்டம் நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளர் சத்தியபாமா, உதவி கோட்டப் பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் பூபால் சிங், கோட்ட கணக்கர் பெரியசாமி ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து நெடுஞ்சாலை துறை முதன்மை இயக்குனர் தீரஜ்குமார் உத்தரவிட்டார்.
அதற்கான ஆணைகளை திருப்பூர் கோட்ட நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் வளர்மதி நேற்று இரவு வழங்கியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூரில் சாலை போடாமலேயே ரூ.3.5 கோடி ஊழல் செய்திருப்பதாகக் கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.