கரூரில் சோதனையிட சென்ற அதிகாரிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக வருமானவரி துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கரூரில் அமைச்சரின் சகோதரர் இல்லத்தில் சோதனை நடத்தச் சென்ற அதிகாரிகளை சிறைபிடித்து திமுகவினர், அவர்களையும் தாக்கியதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய நபர்கள் மீது கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், கரூரில் சோதனையிட சென்ற அதிகாரிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக வருமானவரி துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர். தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக கூறிய அதிகாரிகள், கொங்குமெஸ் சுப்ரமணி என்பவர் செல்வராஜ் என்பவருடன் பேசிய ஆடியோ பதிவு கிடைத்துள்ளதாகவும், கும்பலாக சென்று அதிகாரிகளை தாக்கிவிட்டு, ரொக்கம், ஆவணங்களை பறித்து செல்லுமாறு அதில் பேசியதாக கூறுகின்றனர். மேலும், இந்த ஆடியோ ஆதாரத்தை காவல்துறையில் சமர்ப்பிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.