அதிகாரிகளை தாக்கியது திட்டமிட்ட சதி… வருமான வரித்துறையினரிடம் சிக்கிய ஆதாரம்.. பரபரப்பை கிளப்பிய ஐ.டி. ரெய்டு ஆடியோ..!!

Author: Babu Lakshmanan
27 May 2023, 4:58 pm
Quick Share

கரூரில் சோதனையிட சென்ற அதிகாரிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக வருமானவரி துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கரூரில் அமைச்சரின் சகோதரர் இல்லத்தில் சோதனை நடத்தச் சென்ற அதிகாரிகளை சிறைபிடித்து திமுகவினர், அவர்களையும் தாக்கியதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய நபர்கள் மீது கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், கரூரில் சோதனையிட சென்ற அதிகாரிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக வருமானவரி துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர். தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக கூறிய அதிகாரிகள், கொங்குமெஸ் சுப்ரமணி என்பவர் செல்வராஜ் என்பவருடன் பேசிய ஆடியோ பதிவு கிடைத்துள்ளதாகவும், கும்பலாக சென்று அதிகாரிகளை தாக்கிவிட்டு, ரொக்கம், ஆவணங்களை பறித்து செல்லுமாறு அதில் பேசியதாக கூறுகின்றனர். மேலும், இந்த ஆடியோ ஆதாரத்தை காவல்துறையில் சமர்ப்பிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Views: - 255

0

0