குழந்தைகளை எனக்கு குடுத்துடுங்க: நான் பார்த்துக்கறேன்: நெகிழ்ச்சி பதிவுக்கு கேரள அமைச்சரின் பதில்…!!

கேரள அரசின் குடும்ப நல மற்றும் பொது சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வயநாடு குறித்த பதிவொன்றை போட்டிருந்தார். அதற்கு கீழே சுதி என்பவர் வயநாடு பேரிடரில் பெற்றோரை இழந்த குழந்தைகள் இருந்தால் என்னிடம் தாருங்கள். என் குழந்தைகளை போல நான் பார்த்துக் கொள்கிறேன்,எனக்கு இரண்டு குழந்தைகள் இன்னும் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து நானும் என் மனைவியும் தங்கம் போல் பார்த்துக் கொள்வோம்..’என்று பதிவு செய்தார்

இந்த பதிவுக்கு பதிலளித்த வீணா ஜார்ஜ் வயநாடு பேரிடரில் அனாதையான குழந்தைகளை தத்தெடுக்க பலர் தயாராக உள்ளனர். பலர் சமூக ஊடகங்கள் மூலம் தன்னார்வத் தொண்டு செய்கின்றனர்.

எனது முகநூல் பதிவின் கீழே ஒரு கருத்தைக் கவனித்தேன்.அன்புள்ள சுதி, உங்கள் கருணைக்கு என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி. உங்கள் வலி முற்றிலும் புரிந்து கொள்ளக்கூடியது.உங்கள் வார்த்தைகளை பார்த்து என் கண்களில் கண்ணீர் கசிந்தது.உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் என் அன்பு.

மத்திய சிறார் நீதிச் சட்டம், 2015ன் கீழ் பெற்றோரை இழந்து, பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளை அரசு கவனித்துக் கொள்கிறது. வளர்ப்பு பராமரிப்பு மற்றும் தத்தெடுப்பு அனைத்தும் சட்ட நடைமுறைகள் மூலம் செய்யப்படுகின்றன. CARA (Central Adoption Resource Authority) இல் பதிவு செய்தவர்கள் குழந்தைகளை தத்தெடுக்கலாம். 6 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு வளர்ப்பு பராமரிப்பும் வழங்கப்படுகிறது. அதுவும் குழந்தையின் நலனை மனதில் கொண்டு செய்ய வேண்டும்.CARA வில் பதிவு செய்யப்பட்டிருந்தால், அரசாங்க பராமரிப்பில் உள்ள எந்தவொரு குழந்தையையும் தத்தெடுக்கும் செயல்முறையிலும் நீங்களும் பங்கேற்க முடியும். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையை சுதி போன்ற நல்ல உள்ளங்கள் பலர் அணுகுவதால் இதை தெளிவுபடுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
Sudha

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

2 days ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

2 days ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

2 days ago

This website uses cookies.