தஞ்சை : கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில் ஏறிய நபர் ஒருவர், ஓட்டுநர் மற்றும் நடத்துநரை அரிவாளால் தாக்கிய அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கும்பகோணத்தில் இருந்து எலுமிச்சங்காய் பாளையத்திற்கு மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பயணித்த நபர் ஒருவர் பேருந்தை வழியில் நிறுத்தக்கோரி வாக்குவாதம் செய்துள்ளார். மேலும், ஸ்டியரிங்கை திருப்பி வம்பில் ஈடுபட்டதுடன், சாவியையும் பிடுங்கி உள்ளார்.
இதைத் தொடர்ந்து, தனது நண்பர்களை வரவழைத்த அந்த நபர், ஓட்டுநர் மற்றும் நடத்துநரை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடினர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த வீடியோவை பகிரும் நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…
தேர்தலை நோக்கி விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு…
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம்…
This website uses cookies.