ஒய் பிளட் ; சேம் பிளட்: ஆபாச வார்த்தைகளால் காதை மூட வைத்த வக்கீல்: போலீசுக்கே இந்த நிலையா..!!

திருப்பத்தூர் ஜோலார்பேட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தில்லைநகரை சேர்ந்த கமலக்கண்ணன் மற்றும் சாய்பாபா நகரை சேர்ந்த பைரோஸ்கான் ஆகியோரிடம் தனது காரை ஒரு லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்துள்ளார்.

அடமானம் வைக்கப்பட்ட அந்த காரை கமலக்கண்ணனும் பைரோஸ்கானும் சேர்ந்து போலியாக பத்திரம் தயாரித்து மூன்று லட்சம் ரூபாய்க்கு விற்று விட்டதாக சொல்லப்படுகிறது. காரைத் திரும்பக் கேட்ட பெண்ணிடம் காரை திரும்பத் தர முடியாது என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ என்று கமலக்கண்ணனும் பைரோஸ்கானும் கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைய அந்த பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்ப்பு கூட்டத்தின் போது மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று மயங்கி விழுந்ததாக தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.கமலக்கண்ணன் மற்றும் பைரோஸ் கான் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

இவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் அவர்கள் இருவரிடமும் நீதிபதி கேட்டால் உடல்நிலை சரியில்லை என்று கூறுங்கள் என்று சொல்லி தந்ததாக சொல்லப்படுகிறது. அதை கேட்ட காவலர் குடியரசன் எதற்காக இப்படி தவறாக வழி நடத்துகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர் சுரேஷ் காவலர் குடியரசனை தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளார் அத்தனை பேர் சுற்றி இருக்க ஒரு நல்ல பொறுப்பில் இருக்கும் ஒரு வக்கீல் ஒரு காவலரை தகாத வார்த்தைகளால் பேசியது நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்லாமல் “இது எங்க கோர்ட் நாங்க பார்த்துப்போம்” என்று கூறினார் வழக்கறிஞர் சுரேஷ். கோர்ட் வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sudha

Recent Posts

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

7 minutes ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

42 minutes ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

1 hour ago

பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…

பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…

4 hours ago

அதிமுக மூத்த தலைவருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு… செல்லூர் ராஜு சொன்ன விளக்கம்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…

4 hours ago

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

4 hours ago

This website uses cookies.