சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சி அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் உள்ள இந்திய ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவரான ரவி பச்சமுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் பேசியதாவது :- நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்
முதல்கட்டமாக 60 இடங்கள். பிற இடங்களில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட இருப்பதாகவும், அதனை தொடர்ந்து 3 கட்டமாக வேட்பாளர்கள் பெயர்களை அறிவிக்க இருப்பதாக தெரிவித்தார். இந்திய ஜனநாயக கட்சி நாகரீகமான அரசியலையும், நேர்மையான அரசியலையும் நேர்மையான அரசியலையும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய வகையில் ஒரு அரசியல் மேற்கொள்ளும்.
தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் வழங்க மாட்டோம் எனவும், மக்கள் மாற்றத்திற்கு விரும்பும் நிலையிலும், சிறிய தயக்க நிலையிலேயே இருப்பதாகவும், எனினும் இந்திய ஜனநாயக கட்சியை பொறுத்த வரை தொடர்ந்து நாங்கள் வெற்றி தோல்விகளை பொருட்படுத்தாமல் மக்கள் எங்களை ஏற்கும் வரை தொடர்ந்து போட்டியிடுவோம், என தெரிவித்தார்.
பொதுவாக அரசியலில் ஒருவருக்கு ஒருவர் திட்டி அரசியல் செய்வது வழக்கம். இந்திய ஜனநாயக கட்சியை பொறுத்தவரை அதிலிருந்து மாறுபட்டு மற்றவர்களை விமர்சனம் செய்யாமல், அதே நேரத்தில் அவர்கள் புண்படாத வகையில் அவர்களை விமர்சனம் செய்து பிரச்சாரம் மேற்கொள்வோம், என தெரிவித்தார். எங்களுடைய வேட்பாளர்கள் மக்களுக்கு என்ன சேவை செய்வோம் என என்பதை கூறி பிரச்சாரம் மேற்கொள்வோம் என தெரிவித்தார்.
50% பெண்களுக்கு வாய்ப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு கொடுத்தால், அவர்கள் தங்களது தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய வகையில் எங்களது கொள்கை மற்றும் நிலைப்பாடாக உள்ளது எனவும், இந்திய ஜனநாயக கட்சி வரும் காலங்களில் இந்திய அளவில் ஆட்சியை பிடிக்கும், தெரிவித்தார். மக்கள் மத்தியில் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு ஒரு அமைதியான ஆதரவு அலை இருப்பதாகவும் தெரிவித்தார்.
அந்த பேட்டியின்போது கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன் முதன்மை அமைப்புச் செயலாளர் எஸ்எஸ் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.