திருவள்ளூர் : கர்மவீரர் காமராஜர் முதல்வரான போது அது பொறுக்காமல் மகாத்மா காந்தியே அவருக்கு புறம்பாக பலமுறை பேசியுள்ளார் என்று திமுக ஆதரவு பேராசிரியை பர்வீன் சுல்தானா பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கர்மவீரர் காமராஜர் 120வது பிறந்த நாள் கருத்தரங்கம் நேற்று பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார், பேராசிரியர் பர்வீன் சுல்தானா காமராஜர் ஆட்சி முறை பற்றி சிறப்புரையாற்றினர்.
பின்னர் மூத்த காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் பண முடிப்பினை வழங்கினர்.
இதைத் தொடர்ந்து, கருத்தரங்கில் பாராளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவருமான டாக்டர் ஜெயக்குமார் பேசியதாவது :- அடுத்த தேர்தலில் நாம் வாக்களிக்க போகிறோமோ என்பது சந்தேகமே என்றும், பிரதமரின் மோடியின் செயல்பாடுகள் சர்வாதிகார போக்காக உள்ளது என்றும் கூறினார்.
மேலும், அவர் சர்வாதிகாரியாக மாறுவதற்காக அக்னிபத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் ஆர்எஸ்எஸ் காரர்களை சேர்க்கிறார் என்றும், ஆர்எஸ்எஸ் சங்கிகள் ராணுவத்தில் நுழைவதை காங்கிரஸ்காரர்கள் உயிரை கொடுத்தாவது தடுக்க தயங்கக் கூடாது, என்றார்.
பின்னர், பேசிய பேராசிரியர் பர்வீன் சுல்தானா பள்ளி, கல்லூரிகள் பல திறந்து பலரின் கல்விக்கண் திறந்தவர் காமராஜர் என்றும், சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பிடிக்கும் என்றும் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவரே காமராஜர் எனவும் தெரிவித்த அவர், பாராளுமன்றத்தில் தேசத்தில் ஊழல் இருக்கக் கூடாது என கூறி இருந்தால் பாராட்டி இருப்பேன் என்றும், ஊழல் செய்கிறீர்கள் என யாரையும் சொல்லாதீர்கள் எனக் கூறுவது வேதனை அளிப்பதாக கூறினார்.
தொடர்ந்து, தமிழினத்தைச் சேர்ந்த காமராஜர் முதல்வரானதால் மகாத்மா காந்தியே
அவருக்கு புறம்பாக பலமுறை பேசியுள்ளார் என தெரிவித்தார்.
திமுக ஆதரவு பேராசிரியர் பர்வீன் சுல்தானா காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மகாத்மா காந்தி பற்றி பேசியது கட்சியினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.