சென்னை: மதுரவாயலில் ஓடும் அரசுப் பேருந்தில் பெண் வழக்கறிஞரிடம் பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த 28 வயது பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இந்நிலையில், நேற்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வேலூருக்கு அரசு பேருந்தில் தனது தாயுடன் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின் சீட்டில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் கையை நீட்டி அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அந்த பெண் தன்னிடம் இருந்த சேப்டி பின்னை கொண்டு கையை குத்தியுள்ளார். ஆனால் அந்த ஆசாமி கையை எடுக்காமல் வைத்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணை இதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து, அந்த பெண் பேருந்தை நிறுத்த சொல்லி வானகரம் அருகே அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டு மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், அந்த நபர் பெயர் ராகவன்(40) என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் அவர் பதிவு செய்த வீடியோவோடு போலீசாரிடம் புகார் அளித்து, அநத் காட்சிகளையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளார். மேலும் அந்த வீடியோவில் புகார் அளித்த சிலமணி நேரத்தில் விரைந்து செயல்பட்டு பாலியல் தொல்லை கொடுத்த நபரை கைது செய்த போலீசாருக்கு நன்றி தெரிவித்தும் வீடியோ பதிவேற்றம் செய்துள்ளார்.
அதேசமயத்தில் அரசு விரைவுப் பேருந்துகளில் நடத்துநர் இல்லாததால் குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுவதாகவும் உடனடியாக அரசு விரைவுப் பேருந்துகளில் நடத்துநனர்களை நியமிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.