திமுகவுக்கு ரூ.656 கோடியில் ரூ.509 கோடியை கொடுத்த மார்ட்டின்… வெளியான முழு பின்னணி!!!

திமுகவுக்கு ரூ.656 கோடியில் ரூ.509 கோடியை கொடுத்த மார்ட்டின்… வெளியான முழு பின்னணி!!!

தேர்தல் பத்திரம் செல்லாது. இனி தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்கக்கூடாது என கடந்த மாதம் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் 2019 முதல் கடந்த மாதம் 15ம் தேதி வரை தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகள் பெற்ற நன்கொடை, நன்கொடை வழங்கியவர்களின் விபரங்களை வெளியிட எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் எஸ்பிஐ வழங்கும் தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 14ம் தேதி எஸ்பிஐ அளித்த விபரங்களை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டது. இதில் நன்கொடை வழங்கிய நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் நன்கொடை பெற்ற கட்சிகளின் விபரங்கள் தனித்தனியே இருந்தன.
தேர்தல் பத்திரத்தின் எண் இல்லாத நிலையில் எந்த நிறுவனம் எந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை வழங்கினர் என்பது தெரியாமல் போனது. எஸ்பிஐயின் இந்த செயலை உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் கண்டித்ததோடு, தவறு நடந்தது தொடர்பாக நாளைக்குள் விளக்கம் அளிக்க எஸ்பிஐக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கிடையே தான் 2018 முதல் தேர்தல் பத்திரங்கள் நடைமுறையில் உள்ளது. ஆனால் 2019 ஏப்ரல் 12ம் தேதி முதல் கடந்த மாதம் 15ம் தேதி வரையிலான தேர்தல் பத்திர நன்கொடை விபரங்கள் மட்டுமே கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டன. ஆனால் அதற்கு முன்பு 2018 முதல் 2019 ஏப்ரல் 12ம் தேதி வரையிலான தேர்தல் பத்திரங்களின் விபரம் வெளியிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் தான் வெளியிடப்படாமல் இருந்த 2019 ஏப்ரல் 12ம் தேதிக்கு முந்தைய தேர்தல் பத்திரங்களின் விபரம் இன்று இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கிய நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

அதில் திமுகவுக்கு நன்கொடை வழங்கியவர்களின் விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி திமுக மொத்தம் ரூ.656.5 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதில் ரூ.509 கோடியை ஃப்யூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிஆர் நிறுவனம் வழங்கி உள்ளது. இது லாட்டரி மார்ட்டினின் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம் அதிக அளவில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனமாக உள்ளது. லாட்டரி மார்ட்டின் நிர்வாக இயக்குனராக உள்ள ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிஆர் நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு அதிக நன்கொடை வழங்கியுள்ளது. ரூ.1,368 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக அளித்துள்ளார்.

இந்த லாட்டரி மார்ட்டின் கடந்த பணமோசடி வழக்கில் சிக்கினார். மேலும் மார்டின் மற்றும் அவரது மகன் ஜோஸ் சார்லஸ் மார்டின் ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

2 days ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

2 days ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

2 days ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

2 days ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

2 days ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

2 days ago

This website uses cookies.