திமுகவுக்கு ரூ.656 கோடியில் ரூ.509 கோடியை கொடுத்த மார்ட்டின்… வெளியான முழு பின்னணி!!!

Author: Udayachandran RadhaKrishnan
17 March 2024, 7:12 pm
Bond
Quick Share

திமுகவுக்கு ரூ.656 கோடியில் ரூ.509 கோடியை கொடுத்த மார்ட்டின்… வெளியான முழு பின்னணி!!!

தேர்தல் பத்திரம் செல்லாது. இனி தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்கக்கூடாது என கடந்த மாதம் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் 2019 முதல் கடந்த மாதம் 15ம் தேதி வரை தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகள் பெற்ற நன்கொடை, நன்கொடை வழங்கியவர்களின் விபரங்களை வெளியிட எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் எஸ்பிஐ வழங்கும் தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 14ம் தேதி எஸ்பிஐ அளித்த விபரங்களை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டது. இதில் நன்கொடை வழங்கிய நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் நன்கொடை பெற்ற கட்சிகளின் விபரங்கள் தனித்தனியே இருந்தன.
தேர்தல் பத்திரத்தின் எண் இல்லாத நிலையில் எந்த நிறுவனம் எந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை வழங்கினர் என்பது தெரியாமல் போனது. எஸ்பிஐயின் இந்த செயலை உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் கண்டித்ததோடு, தவறு நடந்தது தொடர்பாக நாளைக்குள் விளக்கம் அளிக்க எஸ்பிஐக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கிடையே தான் 2018 முதல் தேர்தல் பத்திரங்கள் நடைமுறையில் உள்ளது. ஆனால் 2019 ஏப்ரல் 12ம் தேதி முதல் கடந்த மாதம் 15ம் தேதி வரையிலான தேர்தல் பத்திர நன்கொடை விபரங்கள் மட்டுமே கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டன. ஆனால் அதற்கு முன்பு 2018 முதல் 2019 ஏப்ரல் 12ம் தேதி வரையிலான தேர்தல் பத்திரங்களின் விபரம் வெளியிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் தான் வெளியிடப்படாமல் இருந்த 2019 ஏப்ரல் 12ம் தேதிக்கு முந்தைய தேர்தல் பத்திரங்களின் விபரம் இன்று இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கிய நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

அதில் திமுகவுக்கு நன்கொடை வழங்கியவர்களின் விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி திமுக மொத்தம் ரூ.656.5 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதில் ரூ.509 கோடியை ஃப்யூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிஆர் நிறுவனம் வழங்கி உள்ளது. இது லாட்டரி மார்ட்டினின் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம் அதிக அளவில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனமாக உள்ளது. லாட்டரி மார்ட்டின் நிர்வாக இயக்குனராக உள்ள ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிஆர் நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு அதிக நன்கொடை வழங்கியுள்ளது. ரூ.1,368 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக அளித்துள்ளார்.

இந்த லாட்டரி மார்ட்டின் கடந்த பணமோசடி வழக்கில் சிக்கினார். மேலும் மார்டின் மற்றும் அவரது மகன் ஜோஸ் சார்லஸ் மார்டின் ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 145

0

0