மயிலாடுதுறை அருகே பெண் ஒருவரின் வாக்கை, யாரோ கள்ள ஓட்டாக போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று காலை 7 மணி முதல் நடந்து வருகிறது. மக்களும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். மயிலாடுதுறை நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. அதில், 10வது வார்டு கவிஞர் வேதநாயகம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் 3 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், வாக்கச்சாவடி எண்.12ல் ஈவேரா தெருவைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மனைவி செல்வி என்ற பெண் வாக்களிக்க வந்துள்ளார்.
அப்போது, அவரது வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், தான் வாக்களிக்க வில்லை என அந்தப் பெண் அதிகாரிகளிடம் கூறினார். பின்னர், அந்தப் பெண்ணின் உறவினர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பூத் ஸ்லிப்பில் பிரிண்ட் சரியாக இல்லை என்றும், முகக்கவசம் அணிந்து வருவதால் வாக்காளர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படுவதாகவும் அதிகாரிகள் விளக்கமளித்தனர். பின்னர், நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்தப் பெண்ணுக்கு மாற்று ஓட்டு வழங்கப்பட்டது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.