வேலூர் ; தென் பென்னை ஆற்றில் மத்திய அரசு நீர் பங்கீட்டு ஆணையம் அமைக்கும் வரையில் தொடர்ந்து நீதிமன்றத்தை தமிழக அரசு நாடும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் அவசர திமுக பொதுகுழு கூட்டம் அவைத்தலைவர் முகமதுசகி தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், வில்வநாதன், அமுலு, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கை விரைந்து முடிக்க வேண்டும், திமுக தலைவர் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்த தின விழாவில் திரளானோர் கலந்துகொள்வது எனவும், இரண்டு ஆண்டுகள் சாதனை குறித்து மாவட்டத்தில் அனைத்து பகுதிகளில் பொது கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்டவைகளை வழிமுறைகளை எடுத்து கூறினார்.
பின்னர் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “உச்சநீதிமன்றத்தில் தென் பென்னை ஆற்றில் கர்நாடகா அணை கட்டக்கூடாது என தமிழக அரசு சார்பில் வழக்குதொடர்ந்தோம். மத்திய அரசு நீர் பங்கீட்டு ஆணையம் அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் மத்திய அரசு அமைக்காததால் உச்சநீதிமன்றம் சென்றோம். காவிரியிலும் மத்திய அரசு இதை தான் கையாண்டது. இதனை உச்சநீதிமன்றத்தில் எடுத்து சொல்வோம். நீர் பங்கீட்டு ஆணையம் அமைக்கும் வரையில் விடமாட்டோம். திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை கர்நாடகாவில் காங்கிரஸ் அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது, வரவேற்கதக்கது, என கூறினார்.
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
This website uses cookies.