சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, மேயர் பிரியாவை அமைச்சர் கே.என். நேரு அதட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
சென்னை தினம் தலைநகரில் 2 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில், வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவர்களுக்கு நகர்ப்புற மேம்பாடு மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு பரிசுகளை வழங்கினார்.
பின்னர், அமைச்சர் கே.என். நேரு மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தான் கொண்டு வந்திருந்த பேப்பரை வாசிக்கட்டுமா..? என்று அமைச்சரிடம் மேயர் பிரியா கேட்டார். அதற்கு அமைச்சர் கே.என். நேரு, “சொல்லுமா…” என அதட்டி சொன்னார்.
இதைத் தொடர்ந்து, ஸ்மார்ட் சிட்டி முறைகேடு, சென்னையில் வெள்ள பாதிப்பு உள்ளிட்டவை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் கே.என். நேருவும் பதிலளித்தார்.
‘
பின்னர், செய்தியாளர் சந்திப்பு நிறைவடைந்த பிறகு மேயர் பிரியா எழுந்து சென்றார். அப்போது, பத்திரிக்கையாளர் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை கேட்ட அமைச்சர் கே.என். நேரு, “யம்மா, நிப்பியா அப்படியே” எனக் கூறினார்.
செய்தியாளர் சந்திப்பில் சென்னை மேயரை அமைச்சர் அதட்டி பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர், எதிர்ப்பும், விமர்சித்தும் வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.