தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், பொது நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதா..? என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் HMC மருத்துவமனையை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பால்வளதுறை அமைச்சர் சாமு நாசர், சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் ஆகியோர் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.
பின்னர், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் உலக அளவிலான திட்டமாக பாராட்டப்படுகிறது. இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 91 ஆயிரத்து 86 பேர் விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அரசு உதவி இருக்கிறது. காப்பீடு திட்டத்தின்படிசுமார் 82 கோடி 37 லட்சம் விடுவிக்கப்பட்டது.
கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் பகுதியாகும். அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டபடி, 500 கலைஞர் உணவகம் விரைவில் தமிழகத்தில் ஏற்படுத்தப்படும்.
பொது நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் அவசியமில்லை. தற்போது 40 சதவீதம் மருத்துவமனையில் கொரானோ நோயாளிகள் அனுமதிக்கப்பட்டால் மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்ற ஒன்றிய அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படும். தமிழகத்தில் 2000 முதல் 2500 பாதிப்புகள் உள்ளது.
BA4 BA5 உருமாற்றம் அடைந்த வைரஸ் உலகில் 110 நாடுகளை அச்சுறுத்திக் கொண்டு வருகிறது. வேகமாக பரவும் தன்மையுடையது என்பதால் தடுப்பூசி போடும் பணி மக்கள் இயக்கமாக மாறி உள்ளது. ஒரே நாளில் 17 லட்சத்தி 55 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. சரியாக கொரோனா விதிகளை கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது, என அவர் தெரிவித்தார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.