திருவள்ளூரில் அரசின் சிறப்பு மருத்துவ முகாமிற்கு மக்கள் யாரும் வராததால், அதிருப்தியடைந்த அமைச்சர் நாசர் அதிகாரிகளை கடுமையாக திட்டி தீர்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதேபோல, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே செல்கிறது. தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சளி, காய்ச்சல், இருமலுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனிடையே, அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளை உருவாக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும், சிறப்பு மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயலில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை அமைச்சர் நாசர் துவக்கி வைக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மருத்துவ முகாமை திறந்து வைப்பதற்காக அமைச்சர் நாசர் திருமுல்லைவாயலுக்கு வருகை தந்தார்.
அமைச்சர் வருகையின் போது, இருக்கையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர். மருத்துவ முகாமிற்கு மக்கள் யாரும் வராததால் அமைச்சர் நாசர் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து, காரில் இருந்தபடியே அதிகாரிகள், திமுக கவுன்சிலர்கள், நிர்வாகிகளை அழைத்து மக்கள் எதற்காக மருத்துவ முகாமிற்கு வரவில்லை என கண்டித்தார்.
மேலும் மக்கள் யாரும் வராததால், சிறப்பு மருத்துவ முகாமை ரத்து செய்து அமைச்சர் நாசர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.