ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் முகாமில் பெண் ஒருவர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பொன்முடி அளித்த பதிலால் சலசலப்பு ஏற்பட்டது.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஒன்றான ரூ.1000 உரிமைத் தொகை செப்டம்பர் மாதம் விநியோகம் செய்யப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த திட்டம் வாயிலாக, ஒரு கோடி பேருக்கு உதவித்தொகை வழங்க, 7,000 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.
இத்திட்டத்தில், பயனாளிகளை சேர்ப்பதற்கான விண்ணப்ப விநியோகம், ரேஷன் ஊழியர்கள் வாயிலாக நடந்து வந்த நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுதும், 35,923 இடங்களில் முகாம்கள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. முகாம்களில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
அந்த வகையில், உரிமை தொகைக்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமில் அமைச்சர் பொன்முடி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பெண் ஒருவர் தக்காளி விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார்.
இதனால், கடுப்பான அமைச்சர் பொன்முடி, “தக்காளி விலை ரூ.100 அதிகரிச்சாலும், ரூ.1000 தரோம்-ல. விலை எல்லாம் ரூ.2, ரூ.3 ஏறும், குறையும். தக்காளி விலை உயர்ந்தால் மோடி கிட்ட போய் கேளு,” எனக் கூறினார். அவரது இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
This website uses cookies.