தமிழக பெண்களை தொடர்ந்து அவமதித்து வரும் அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீரபாண்டி கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி, ஒன்றிய பெண் கவுன்சிலர் ஒருவரை ஒருமையில் பேசியதோடு, ‘உனக்கும், ஊராட்சித் தலைவருக்கும் உள்ள பிரச்னையை தனியாக பேசிக்கங்க’ என்று சொல்லியதுடன், ‘அப்படியா நீ… ஏய்…’ என்றெல்லாம் ஆணவத்தோடு, அவமரியாதையாக பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே பெண்களை பஸ்சில், ‘ஓசியில் போறீங்க…’ என்று கேவலப்படுத்திய நிலையில், தற்போது ஒரு கவுன்சிலரை அவதுாறாக, அராஜகமாக பேசியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.பொன்முடி, தமிழ் பெண்களை தொடர்ந்து அவமதித்து, அராஜகமாக ஆதிக்க மனப்பான்மையோடு பேசி வருவதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்க வேண்டும்.இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.