அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இது தொடர்பாக அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்தத்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. இதைத் தொடர்ந்து, நீதிமன்ற காவலில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர், உச்சநீதிமன்றத்தின் அனுமதியின் பேரில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், செந்தில் பாலாஜியை நேற்று முன்தினம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவருக்கு 25ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.
அதேவேளையில், சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு 4 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போதே, கரூரில் கட்டப்பட்டு வரும் அவரது சொகுசு பங்களாவில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மேலும், அவரது மனைவி நிர்மலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், அந்த பங்களாவை முடக்கியும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது.
இதனிடையே, செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை கேரள மாநிலம் கொச்சியில் அமலாக்கத்துறை நேற்று கைது செய்ததாக சமூகவலைதளங்களில் தகவல் வெளியானது.
இந்நிலையில், அசோக் குமார் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. கொச்சியில் அசோக் குமார் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என்றும்,4 முறை சம்மன் அனுப்பியும் அசோக் குமார் விசாரணைக்கு இன்னும் ஆஜராகவில்லை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.